ETV Bharat / entertainment

நயன்தாரா மீது காவல் நிலையத்தில் புகார்

author img

By

Published : Oct 15, 2022, 11:32 AM IST

விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatநடிகை நயன்தாரா மீது காவல் நிலையத்தில் புகார்
Etv Bharatநடிகை நயன்தாரா மீது காவல் நிலையத்தில் புகார்

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, சட்டத்தை மீறி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், ‘மத்திய மற்றும் மாநில அரசுகள் வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்துள்ளது. கர்ப்பபையில் பிரச்சனை, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளின் படி வாடகை தாய் தேவை என்று மருத்துவ சான்றிதழை மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெற வேண்டும்.

ஆனால், இதில் எந்த விதிகளையும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பின்பற்றவில்லை. மேலும் அரசு விதிமுறைகளை மீறி திருமணமாகி ஓராண்டு நிறைவடையாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி மீது மத்திய மற்றும் மாநில வாடகை தாய் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு தவறான முன் உதாரணமாக இருக்கிறது.

சட்டவிரோதமாக வாடகை தாய் முறையை ஊக்குவிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகைதாய் மற்றும் வாடகை தாய் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஆகியோரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மறைந்தார் ’ஹாக்ரிட்’...! ; ஹாரிபாட்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.